அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம்
பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு
பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட
வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப்
பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை
செய்வதில்லை.

