February 26, 2012

ஏப்ரலில் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு - ரூ.5 ஆயிரம் உழைப்பூதியம்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரலில் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே வருவாய்த்துறை மூலம் சமூகப்பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


தற்போது நகராட்சி, மாநகராட்சி அளவில் தனியாகவும், ஊராட்சி ஒன்றியங்களில் பி.டி.ஓ.,க்கள் தலைமையிலும், பேரூராட்சிகளில் நிர்வாக அலுவலர்கள் தலைமையிலும் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அடிப்படையில் கணக்கெடுப்பு பகுதிகள் பிரிக்கப்பட்டு, ஏப்ரல் முதல் பணிகள் துவங்குகின்றன.


ஒவ்வொரு கணக்கெடுப்பாளரும், 150 வீடுகள் வரை கணக்கெடுக்க உள்ளனர். 40 நாட்கள் நடக்கும் இப்பணிக்காக ஒரு ஊழியருக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் உழைப்பூதியம் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment