About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

May 16, 2012

முப்பருவ கல்வி முறை: ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி


முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டம் தொடர்பாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு தொடங்கும்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புத்தக சுமையை குறைக்க திட்டமிட்டு, முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட உள்ளது.


முதல் கட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அந்த வகையில் ஒரு முழு கல்வியாண்டு என்பது மூன்றாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் ஒரே புத்தகம் தயார் செய்யப்பட உள்ளது.


ஜூன் முதல் செப்டம்பர் வரையில் ஒரு புத்தகமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒரு புத்தகமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒரு புத்தகமும் என்ற அடிப்படையில் புத்தகத்தின் அளவு குறைக்கப்படுகிறது. புதிய முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.


இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது
:
முழுமையான தொடர் மதிப்பீட்டு முறை, முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டம் தொடர்பாக சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. படிப்படியாக எல்லா அதிகாரிகளுக்கும் அளிக்கப்படும். முதல் கட்டமாக மாவட்ட கல்வி அலுவலர்கள் 74 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இன்று (15ம் தேதி) அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர்கள் 32 பேர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் 15 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
16ம் தேதி 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 32 அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு தொடங்கும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: