About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

March 16, 2012

Budget 2012-2013 ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ள்

WD
2010-2011ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான பொது ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை ‌நி‌தி அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி ‌விரை‌வி‌ல் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்‌க‌ல் செ‌ய்ய‌ உ‌ள்ளா‌ர்

நி‌தி‌நிலை அ‌றி‌க்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:

* புகைக்கும் (சிகரெட், பீடி) மற்றும் புகைக்காத அனைத்து வகை புகையிலை தயாரிப்பு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு.

* பெரிய கார்களுக்கான கலால் வரியில் ஒரு பகுதி குறைப்பு.

* சாலை திட்டங்களுக்கான சில உபகரணங்களுக்கு இறக்குமதி வரி கிடையாது.

* சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கான யூனிட் விலைகள் 5% குறைக்கப்படும்.

* மின்சார கார்களுக்கான வரி முற்றிலும் நீக்கம்.

* சிமெண்ட் மீதான கலால் வரி குறைப்பு.

* வேளாண் வித்துக்கள் மீதான சேவை வரி நீக்கம்.

* சேவை வரி, "பீக்" சுங்க வரியில் மாற்றமில்லை; 10 சதவீதமாக நீடிப்பு.

* புதிய ஏஜென்சிகளுக்கு சேவை வரியில் விலக்கு.

* மறைமுக வரிவிதிப்பால் ரூ.45,000 கோடி ஆதாயம்.

* ஜிடிபி விகிதத்திற்கான சேவை வரி 1%.

* தங்கம், பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி ரூ.200இல் இருந்து ரூ.300 ஆக அதிகரிப்பு.

* குறைந்தபட்ச மாற்று வரி 18% ஆக அதிகரிப்பு.

* உரம் மற்றும் எண்ணெய்க்கான மானியம் பாண்டுகளாக அளிக்கப்படுவதற்குப் பதிலாக ரொக்கமாக அளிக்கப்படும்.

* பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்படும்.

* டிவி, ஏசி, கார்கள் மீது கூடுதல் வரி.

* புதிய தனியார் வங்கிகளுக்கு ஆர்பிஐ உரிமம் வழங்கும்.

* பட்ஜெட் பற்றாக்குறை 5.5%

* 2012 ஆம் நிதியாண்டில் பட்ஜெட் பற்றாக்குறை 4.8 % ஆக இருக்கும் என தெரிகிறது.

* 2012 ஆம் நிதியாண்டில் பட்ஜெட் பற்றாக்குறை 4.1 % ஆக இருக்கும் என தெரிகிறது.

* 2011 ஆம் நிதியாண்டில் சந்தைக் கடன் ரூ.3.45 லட்சம் கோடியாக இருக்கும்.

* பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,47,000 கோடி.

* மாவோயிஸ்டுளால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சிறப்பு படைகள் அமைக்கப்படும். அதற்குப் போதுமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும்.

* 2009-10 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி இலக்கு 8.7% ஆக அதிகரித்து ரூ.11 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

* திட்டம் சாரா ஏற்றுமதி 6% மட்டுமே அதிகரித்துள்ளது.

* 2009-2010இல் திட்டங்களுக்கான செலவு 15% ஆக அதிகரிப்பு.

* குறைந்த வருவாய் உடைய சுமார் ஒரு லட்சம் பேர் பயனடையும் வகையிலான புதிய திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* சுகாதார அமைச்சகத்திற்கு ரூ.22,300 கோடி ஒதுக்கீடு.

* அமைப்பு சாரா துறை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக மாநில அரசுகளின் பங்களிப்பு கோரப்படும்.

* பாரத் நிர்மாண் திட்டத்திற்காக ரூ.48,000 கோடி ஒதுக்கீடு.

* ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பு துறைகளில் சிறப்பு திறன் வளர்ச்சி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

* வேளாண் பெண் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* சமூக நீதி, மூத்த குடிமக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான திட்டங்களுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.

* நிலக்கரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.

* கிராமப்புற அளவிலான ஆரம்பக் கல்விக்காக மாநிலங்களுக்கு ரூ.3,675 கோடி அளிக்கப்படும்.

* 2011ஆம் நிதியாண்டில் பள்ளிக் கல்விக்கான திட்டங்களுக்காக ரூ.31,000 கோடி ஒதுக்கீடு. 
* கிராமப்புற மேம்பாட்டிற்காக ரூ.66,1000 கோடி ஒதுக்கீடு.

* இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

* வறட்சியை போக்கும் திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.

* நகர்ப்புற மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.5,400 கோடி.

* வீட்டுக் கடனுக்கான 1% வட்டி தள்ளுபடி திட்டத்தை நீட்டிப்பதற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு.

* 2011இல் பின்தங்கிய பகுதிகளுக்கு ரூ.7,300 கோடி ஒதுக்கீடு.

* காதி நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.

* கிழக்கு இந்தியாவில் வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் கடன் திருப்பி செலுத்துவதற்கான காலவரம்பு 6 மாதங்களாக நீட்டிப்ப

* சாலை போக்குவரத்திற்கு ரூ.ரூ.19,894 கோடி ஒதுக்கீடு.

* நாடு முழுவதும் 5 மெகா உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* மின்சாரத் துறைக்கான ஒதுக்கீடு இருமடங்காக (ரூ.5,100 கோடி) அதிகரிப்பு.

* மூலதன செலவீனங்களுக்கான நிதித் தேவைக்காக நடப்பாண்டில் அரசு ரூ.25 ஆயிரம் கோடியை திரட்டும்.

* வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்காக உரத்துறைக்கு மானியம் அளிக்கப்படும்.

* உரிய காலத்தில் 'கிரித் பாரிக்' அறிக்கை மீது விவாதம்.

* அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் உரிமையாளர் மற்றும் கட்டுப்பாட்டு குறித்த கொள்கை தெளிவாக வரையறுக்கப்படும்.

* நான்கு பொதுத்துறை வங்கிகளில் ரூ.1,900 கோடி கூடுதல் மூலதனம்.

* ஏற்றுமதியை அதிகரிக்க சிறப்பு பொருளாதார மணடலங்களை அதிகரிக்க திட்டம்.

* உரிய காலத்தில் பயிர்க்கடனை திருப்பி செலுத்துவோருக்கான வட்டி தள்ளுபடி ஒரு சதவீதத்தில் இருந்து 2 % ஆக அதிகரிப்பு.

* 2009ஆம் ஆண்டில் உணவு வீக்கம் இரட்டை இலக்கத்தில் அதிகரிப்பு.

* உணவுப் பணவீக்கம், உணவு சாரா பொருட்களுக்கும் செல்வதற்கான அறிகுறி.

* பொதுக் கடன்களை குறைக்க நடவடிக்க; இன்னும் 6 மாதங்களில் அதற்கான அறிக்கை தாக்கல்.

* ஏப்ரல் 2011 முதல் புதிய வரி விதிப்பு மற்றும் ஜிஎஸ்டி மற்றும் டிடிசி அமல்.

* பொருளாதார நிலை ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளது; ஆனால் சவால்கள் அப்படியே உள்ளன.

* அரசு சாரா துறைகள் மீது கவனம் செலுத்தப்படும்.

* நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் காணப்பட்ட 7.9% பொருளாதார வளர்ச்சி, மூன்றாவது காலாண்டில் 6% ஆக குறைந்துள்ளது.

* 2009ஆம் ஆண்டில் உற்பத்தி துறையில் 18.9% வளர்ச்சி.
 

No comments: